Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் யானைத் தாக்குதல்: வயதானவர் உயிரிழப்பு!

ஆவணி 31, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவைச் சேர்ந்த தங்கநகர் பகுதியில் யானையின் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இடம்பெற்ற சம்பவம்:
இச்சம்பவம் நேற்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது. இரவு வயலுக்குக் காவலுக்குச் சென்று காலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 58 வயதான தம்பியன் என்பவர், ஒரு தோட்டத்துக்குள் மறைந்திருந்த யானையால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

மக்களின் வேதனை:
போர் காலத்தில் தினமும் உற்றவர்களை இழந்து, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த அப்பிரதேச மக்களுக்கு, இன்று யானைத் தாக்குதல்கள் அந்த வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்ற வேதனையை ஏற்படுத்துகிறது.

அதிகரித்து வரும் சம்பவங்கள்:
திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் கடந்த மாதம் மூன்று பேர் யானைத் தாக்குதல்களில் உயிரிழந்தனர். கூலி வேலைக்காகவும், மீன்பிடிக்காகவும் செல்லும் குடும்பத் தலைவர்களை இத்தாக்குதல்கள் பலியாக்குவதால், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவற்றின் நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளது.

மக்களின் கோரிக்கை:
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த யானைத் தாக்குதல்களுக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என மக்கள் ஏங்கி நிற்கும் நிலை உள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிழக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு 3,371 மில்லியன் ஒதுக்கீடு

ஆவணி 16, 2025
இலங்கைதிருக்கோணமலை

உலக வங்கியுடனான கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட வணிக சம்மேளனத்தினர்

ஆடி 30, 2025
இலங்கைதிருக்கோணமலை

SLCBC Premier Regional Excellence Awards 2026 விழாவில் திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத்திற்கு கௌரவம்

ஆனி 24, 2026
இலங்கைதிருக்கோணமலை

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு எழுச்சி மாநாடு; பாடல் வெளியீட்டு விழாவும் ஏற்பாடு

ஆனி 6, 2026
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?