திருக்கோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம் ஆதீனகர்த்தா வேதாகமமாமணி சோ. இரவிச்சந்திர குருக்களின் 70ஆவது பிறந்தநாள் விழா இன்று (30) மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
ஆன்மீகப் பணியிலும், சமயப் பணியிலும் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் சோ. இரவிச்சந்திர குருக்கள் அவர்களின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வின் பிரதான அம்சமாக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், குருக்களுக்கு சிறப்பு மரியாதைகளும் செலுத்தப்பட்டன. தொடர்ந்து அவர்களின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டும் வகையில் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.
ஆலய நிர்வாகத்தினர், ஆன்மீகப் பெரியார்கள், சமயத் தலைவர்கள், பக்தர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
திருக்கோணமலை மாவட்டத்தின் சைவ சமய வளர்ச்சிக்கும், ஆலயப் பணிகளுக்கும் அவர் ஆற்றிவரும் பங்களிப்புகளைப் பாராட்டியதுடன், அவரது ஆன்மீகப் பணி மேலும் சிறக்கவும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழவும் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் மகிழ்ச்சிகரமான சூழலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



