Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

ஊடகவியலாளர் ஹயக்கிரிவன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு CTIDயால் அழைப்பாணை

கார்த்திகை 28, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
“தளம்” அமைப்பின் இயக்குநரை பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வர அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோணமலை வாழ் இளையோரின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் திறன் விருத்தி போன்ற விடயங்களில் கடந்த ஏழு வருடங்களாக முன் நின்று செயற்பட்டு வருகின்ற “தளம்” அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான வைத்தியர் சி. ஹயக்கிரிவன் (கார்த்தி ஹயன்) அவர்களை எதிர்வரும் 28.11.2025 அன்று திருக்கோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு CTIDயால் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
“தளம்” அமைப்பானது 2018 ஆம் ஆண்டு முதல் திருக்கோணமலையில் சமூக மட்ட அமைப்பாக உரிய பதிவுகளுடன், சுயசார்பு ரீதியில் இளையோரின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் விருத்தி சார்ந்த பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ஒரு அமைப்பாகும். இதனுடாக பல இளையோருக்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டு வருவதுடன், அவர்களின் வாழ்வுக்கான ஒளி ஏற்றலையும் செய்து வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் “தளம்” அலுவலகத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வருகை தந்து இந்த அழைப்பாணையை அலுவலக உத்தியோத்தரிடம் கையளித்துள்ளனர்.
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினால் பலமுறை தளம் அமைப்பின் அலுவலகர்கள், பங்குபற்றுநர்கள், மாணவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.
மேலும் வைத்தியர் சி. ஹயக்கிரிவன் (கார்த்தி ஹயன்) சமூக செயற்பாட்டாளராகவும், ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வரும் ஒரு நபராவார். இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகள் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் முன்னெடுப்புகளாக அமைந்துள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

அதிகரித்துச்செல்லும் அகழ்வுப்பணி : செம்மணியில் 101 எலும்புக்கூடுகள்

ஆடி 27, 2025
இலங்கைதிருக்கோணமலை

இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த தி/புனித சூசையப்பர் கல்லூரி மாணவன்

ஆவணி 13, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் ‘விலை நிர்ணய’ சதி ? நுகர்வோர் நலனைப் பாதுகாக்குமாறு வர்த்தக சங்கம் (TDBC) கோரிக்கை!

தை 13, 2026
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் முன்பள்ளி சிறார்களின் சூழல்நேயக் கண்காட்சி

ஆடி 29, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?