கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் புதிய பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி ஜி. நவஜீவநா, இன்று (06) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கடமைப் பொறுப்பேற்பு நிகழ்வு
திணைக்கள அலுவலகத்தில் எளிமையான முறையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், பிரிவுத் தலைவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு புதிய பதில் பணிப்பாளருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

