Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் ‘விலை நிர்ணய’ சதி ? நுகர்வோர் நலனைப் பாதுகாக்குமாறு வர்த்தக சங்கம் (TDBC) கோரிக்கை!

தை 13, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை நகரப்பகுதியின் உடைச் சந்தையில் ஆரோக்கியமான போட்டித்தன்மை இல்லாமையினால் பொதுமக்கள் பெரும் பொருளாதாரச் சுமைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், இது குறித்து மாநகர சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் திருகோணமலை மாவட்ட வர்த்தக சங்கம் (Trincomalee District Business Council – TDBC) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஊடக அறிக்கை (Media Statement)

திருகோணமலையில் வியாபாரச் சந்தையில் ஆரோக்கியமான போட்டி இல்லாத நிலை குறித்து பொதுமக்கள் மத்தியில் தீவிரமான கவலை நிலவுகிறது. வியாபாரத்தில் போட்டி நிலவினால்தான் நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் என்பது அடிப்படை பொருளாதார உண்மையாகும். இதனை மாநகர சபை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது திருகோணமலையில் புடவைகள் உள்ளிட்ட உடைச் சந்தையில் உள்ளகமாக price fixing (விலை நிர்ணய ஒப்பந்தம்) நடைமுறைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிலை உருவாகி, பலர் கொள்வனவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் வியாபாரிகள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு விலைக்குறைப்பு வழங்குவதன் மூலம் நுகர்வோருக்கு நன்மை அளிக்கின்றனர். ஆனால் திருகோணமலையில் சில வியாபாரிகள் ஒற்றுமை என்ற பெயரில் ஒரே விலையை நிர்ணயித்து அதிக விலையில் விற்பனை செய்வது நுகர்வோருக்கு, குறிப்பாக பாமர மற்றும் நடுத்தர மக்களுக்கு, கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு சிறிய குழு வியாபார சங்கம் என்ற போர்வையில் மாநகர சபையை அச்சுறுத்தவோ, சந்தை முறையை கட்டுப்படுத்தவோ முடியாது. சட்டப்படி கட்டணங்கள் செலுத்தி, விதிமுறைகளை பூர்த்தி செய்பவர்களுக்கு யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக வியாபாரம் செய்ய மாநகர சபை ஊக்குவிக்க வேண்டும். இதுவே நியாயமான சந்தை அமைப்பையும் நுகர்வோர் நலனையும் பாதுகாக்கும்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆரோக்கியமான வர்த்தகப் போட்டி நிலவும் போது மட்டுமே தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும் என்பது பொருளாதார உண்மையாகும். எனவே, நுகர்வோர் நலனை முன்னிறுத்தி, திருகோணமலை மாநகர சபை இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு வெளிப்படையான சந்தை சூழலை உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட வர்த்தக சங்கம் (TDBC)

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நாடு பூராகவும் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் – ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தும் வரை போராடுவோம்!!

கார்த்திகை 3, 2025
இலங்கைதிருக்கோணமலை

மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ்

புரட்டாதி 17, 2025
இலங்கை

பொது மக்களுக்களின் பாதுகாப்புக்காக புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்

ஆவணி 13, 2025
இலங்கைதிருக்கோணமலை

இரண்டாவது நாளாக திருக்கோணமலை பிரதான தபால் நிலையம் முற்றாக முடக்கம்

ஆவணி 19, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?