Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய மருத்துவர் மனோகரனின் நினைவு நிகழ்வு

புரட்டாதி 25, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

“மரணத்தை தாண்டியும் தொடரும் நீதிக்கான பயணம்…”

2006 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருக்கோணமலை கடற்கரையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீதி கோரி, தன்னுடைய இறுதி மூச்சுவரை போராடிய மருத்துவர் மனோகரனின் நினைவு நிகழ்வு இந்த மாதம் நடைபெற உள்ளது.

திருக்கோணமலை கடற்கரையில் நடைபெறும் இந்த நினைவு கூட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

நிகழ்வின் விவரங்கள்:

தலைப்பு: மரணத்தை தாண்டியும் தொடரும் நீதிக்கான பயணம்… ஐந்து மாணவர்களின் நீதிக்காக போராடிய மருத்துவர் மனோகரனின் நினைவு

  • நாள்: செப்டம்பர் 27, சனிக்கிழமை
  • நேரம்: மாலை 6.00 மணி
  • இடம்: திருகோணமலை கடற்கரை (2006ல் சம்பவம் நடந்த இடம்)

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி, லோகிதராசா ரொகான், சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகிய மாணவர்கள் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி கோரிப் போராடி வந்த, அவரின் தந்தையான வைத்தியர் காசிப்பிள்ளை மனோகரன் (வயது 84) என்பவரே, எவ்வித நீதியும் கிடைக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

அரச பயங்கரவாதத்தில் கொல்லப்பட்ட ரஜீகர் மனோகரனின் பிறந்தநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமையாகும்.மகனின் பிறந்த தினத்திலேயே, அவருக்கு நீதி கோரி வந்த தந்தை காலமாகியுள்ளார்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தொடரும் என்புகளின் எண்ணிக்கை ! நேற்றும் புதிதாக எச்சங்கள் கண்டுபிடிப்பு

ஆவணி 3, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலை மாவட்ட பாடசாலை அதிபர்களுக்கு கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

ஆவணி 6, 2025
இலங்கை

6ஆம் திகதி இலங்கையர்களுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு

வைகாசி 4, 2025
இலங்கைதிருக்கோணமலை

‘இலங்கையின் பிரமி மற்றும் சிங்கள கல்வெட்டுகளில் தமிழர்’ எனும் நூல் அறிமுக விழா

ஆடி 27, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?