Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் “உன் மனதின் அற்புதம்” நூல் வெளியீட்டு விழா

பங்குனி 14, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

லோகிதா தனுசன் அவர்களின் அனுபவப் பகிர்வில் உருவான “உன் மனதின் அற்புதம்” நூல் வெளியீட்டு விழா நாளை 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி திரு. சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கு, திருகோணமலை துறைமுக அதிகார சபையின் அதிகாரி திரு. பரசுராமன் சிவநேசன் வரவேற்புரை நிகழ்த்துவார்.

இவ்விழாவில் முதன்மை விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் திரு. வைரமுத்து கனகசிங்கம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். கௌரவ விருந்தினராக தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி தங்கமயிலாள் ஹரிகரன் பங்கேற்கவுள்ளார்.

சிறப்பு விருந்தினர்கள்:
மூத்த எழுத்தாளர் கலாநிதி திரு. கனகசபாபதி சரவணபவன், திருகோணமலை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி திரு. தட்சணாமூர்த்தி ரமேஷ்குமார், கிழக்கிலங்கை தமிழ் விவாத மன்றத்தின் கௌரவ தலைவர் பொறியியலாளர் திரு. கிருபாகரன் ரிஷிகேஷன், உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் (இலங்கை கிளை) தலைவர் திரு. சுந்தரம் சிவபாலன் மற்றும் அதன் செயலாளர் திரு. கந்தையா நேமிநாதன், பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தைச் சேர்ந்த திரு. கணபதிப்பிள்ளை ஹேமதாசன், ‘அன்பின் பாதை’ அமைப்பின் தலைவர் திரு. கனக. தீபகாந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வின் நிறைவாக, சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் செயலாளர் திரு. திருச்செல்வம் ரூபாகர் நன்றியுரை நிகழ்த்துவார்.

இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைஉலகம்

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

ஆவணி 9, 2025
இலங்கை

மாகாண சபை தேர்தலில் களமிறங்க போகிறாரா சுமந்திரன் ?

ஆவணி 4, 2025
இலங்கைதிருக்கோணமலை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட கந்தளாய் மக்களுக்கு AHRC நிறுவனத்தின் வாழ்வாதார உதவிகள்

ஆனி 12, 2026
இலங்கை

அதிகரித்துச் செல்லும் பாடசாலை இடைவிலகல் – அதிர்ச்சித் தகவல்

ஆடி 29, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?