Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக காவல்நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

ஆவணி 31, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முத்துநகர் விவசாயிகள் சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக காவல்நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முத்துநகர் பகுதியில் வசித்து வரும் விவசாயக் காணிகளை இலங்கை துறைமுக அதிகார சபை கையகப்படுத்தி அதனை இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்கு வழங்கிய விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் இடையே முரன்பாடான நிலை நிலவி வருகின்றது.

இந்த நிலையில், சட்டத்தை நியாயமாக நடைமுறைப்படுத்தாமல் தங்கள் நிலங்களை ஆக்கிரமித்த நிறுவன உரிமையாளர்கள் தங்களைத் தாக்கிய சம்பவம் குறித்து முறைப்பாடு அளிக்க சீனக்குடா காவல் நிலையத்திற்கு சென்ற, ​​முறைப்பாட்டாளர்களை கைது செய்ததற்காக சீனக்குடா காவல்துறையினருக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக முறைப்பாடு அளிக்க நேற்று முன்தினம்(28) சீனக்குடா காவல் நிலையத்திற்கு சென்ற ஆறு முத்து நகர் விவசாயிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் நிறுவன உரிமையாளர்களின் தாக்குதலில் மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், காவல்துறையினர் மற்றைய தரப்பினரை கைது செய்யவில்லை என்றும் பக்கச்சார்பாக செயற்பட்டதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

அதன்படி, சுமார் 300 விவசாயிகள் இன்று(30) குறித்த காவல் நிலையத்திற்கு பேரணியாகச் சென்று தங்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததையடுத்து, அந்த நேரத்தில் காவல்துறையினர் வாயில் கதவை மூடி யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

அதிகரித்துச்செல்லும் அகழ்வுப்பணி : செம்மணியில் 101 எலும்புக்கூடுகள்

ஆடி 27, 2025
இலங்கைதிருக்கோணமலை

தோப்பூர் – செல்வநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் மிதிவெடி கண்டுபிடிப்பு

புரட்டாதி 11, 2025
இலங்கைதிருக்கோணமலை

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் திருக்கோணமலை கடற்கரையில் சிரமதானம்

ஆடி 29, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் தமிழ்த் தேசிய வீரர்கள் தின நிகழ்வு

ஆடி 28, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?