Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் நீண்டகாலமாக திருட்டில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது

ஆவணி 15, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக (14) பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல மாதங்களாக பல இடங்களில் தொடர்ச்சியாக திடுட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. இது தொடர்பில் மக்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது 27 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் நீண்டகாலமாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவர்மேல் மக்களுக்கு சந்தேகம் இருந்ததாகவும் தெரிய வருகின்றது.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய மொறவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி சிங்ஹவின் வழிகாட்டலில் உதவி பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.டபிஸ்யூ.பி.ஆர். ஜயம்பதியின் தலையையிலான குழுவினரால் குறித்த நபரை கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையில் 5 மாணவர்கள் (Trinco 5) படுகொலை நீதிக்காக போராடிய தந்தையும் உயிரிழப்பு

புரட்டாதி 23, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பெண் பலி

ஆவணி 12, 2025
இலங்கைதிருக்கோணமலை

மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ்.அருள்ராஜ்

புரட்டாதி 17, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருமலையில் ஆர்வத்துடன் பரதம் பயின்ற போலந்து நாட்டு பெண்மணி

ஆவணி 10, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?