Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

செம்மணிக்கு நீதி கோரி நாளை திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

செம்மணிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

ஆடி 25, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையைக் கோரும் வடக்கு-கிழக்கு மாகாண தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை காலை 10 மணிக்கு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பு ‘மான்புமிகு மலையக மக்கள் சிவில் கூட்டிணைவு’ ஆதரவுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் இந்த போராட்டமானது வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப் பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்ட மானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களிலும் எதிர்வரும் 26.07.2025 சனிக்கிழமை- நாளை காலை 10.00 மணிக்கு (ஒரே நேரத்தில் எட்டு மாவட்டங்களிலும்) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்
1. மட்டக்களப்பு காந்தி பூங்கா.
2. அம்பாறை திருக்கோயில்.
3. திருகோணமலை சிவன் கோயிலடி.
4. முல்லைத் தீவில் மாவட்ட செயலகம் அருகில்.
5. கிளிநொச்சி கந்தசாமி கோயில்.
6. மன்னார் நகரப்பகுதி.
7. வவுனியா புதிய பேரூந்து நிலையம்.
8. யாழ்ப்பாணம் செம்மணியிலும்
9. கொழுப்பு- UN RC அலுவலகத்திற்கு முன்னால் நடைபெற உள்ளது.

 

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைஉலகம்

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

ஆவணி 9, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் ஆனைச்சேனையில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் சடலம்

ஆடி 30, 2025
இலங்கை

GovPay பயன்படுத்தும் முறை

சித்திரை 12, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்திற்கு 2025 ஆம் ஆண்டின் சிறந்த சாரணர் துருப்பு விருது

ஆவணி 13, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?