திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வண்மையும்

பண்டிதர்,சைவப்புலவர் திரு. இ .வடிவேல் 1995

தேவாரம் பாடப்பெற்ற தெய்வத்திரு நகராம் திருக்கு
கோணமலையின் வரலாற்றுச் சிறப்பும், கலாசாரப் பாரம்
பரியமும், அதனோடு இணைந்த ஏனைய பல்வேறு அம்சங்
களும் எமது சிந்தனைக்குத் தோன்றாத்துணையாக இருந்து
வருவது எம்மையெல்லாம் ஆட்கொண்டருளும் திருக்கோணேஸ்
வரப் பெருமானின் திருவருட் பெருங் கருணையே என்றால்
அது மிகையாகாது.

இத்தகைய அருட் சிறப்பையும், வரலாற்றுப் பெருமை
யையும், பழம்பெரும் பாரம் பரியத்தையும், கொண்டு விளங்
கும் இயற்கை வனப்பு மிக்க அழகாபுரியான திருக்கோணமலை
யின் வரலாற்றைத் திரித்துக் கூறியும் எழுதியும் பல ஆதார
மற்ற விடயங்களைத் தற்போது சிலர் வெளியிட்டு வருகின்ற
இவ்வேளையிலே, எமது மாவட்டத்திலுள்ள சிறந்த சைவத்
தமிழ்ப்பெரியாரும் நாடறிந்த சைவ அறிஞருமான சைவப்
பெருந்தகை பண்டிதர்,சைவப்புலவர், சைவசிகாமணி,ஞான
சிரோன்மணி திரு. இ .வடிவேல் அவர்கள் தன்னுடைய அய
ராத தளராத ஆராய்ச்சிக் கண்ணோட்ட முயற்சியால் உந்தப்
பட்டு திருவருட் பேற்றினால் ‘ கோணேஸ்வரம் தொன்மை
யும் வண்மையும்’ என்ற இந்த அரிய நூலை எழுதி எமக்குத்
தந்துள்ளார் என்றால் அது எம்மவர்கள் செய்த பாக்கியம்
என்றே நாம் கருதுகின்றோம். அதுவும் குறிப்பாக வாழையடி
வாழையாக இந்த மண்ணிலே உதிக்கின்ற இளைஞர்கள் தங்க
ளுடைய மாண்புறு தலத்தின் தொன்மையையும் வரலாற்றை
யும் மற்றவர்களுக்கு அஞ்சாமல் இடித்துக்கூறுவதற்கு இந்நூல்
வகை செய்துள்ளதென்றால் அது தவறாகாது என நினைக்
கின்றோம்.

Previous
Next
/