திருக்கோணாசல வைபவம்

அகிலேசபிள்ளை, வே. 2000

இப்புனிதக் கோவிலின் உண்மை வரலாறு இன்று மறைக்கப்பட்டும் திரிபுபடுத்தப்பட்டும் வருகிறது. அதனை தவிர்த்து உண்மை வரலாற்றை உலகறியச் செய்யவும். தமிழினம் தன்னுடைய பழம்பெரும் பாரம்பரியச் சிறப்பை அறிந்து அதனைக் காத்து தலைநிமிர்ந்து வாழவும், உண்மை வரலாற்று நூல்களைத் தேடிப் பதிப்பிக்க முன்வந்தோம்.
அதன் முதற் பணியாக 1889ம் ஆண்டளவில் ஸ்ரீமான். வே. அகிலேச பிள்ளை என்பவரால் எழுதப்பட்ட திருக்கோணாசல வைபவம் என்னும் இக்கோவிலின் உண்மை வரலாற்று 1999ல் மறுபதிப்புச் செய்தோம்.
பல ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க, திருக்கோணாசல வைபவத்துடன் கோணேசர் கல்வெட்டை பண்டிதர் ச. சுப்பிரமணியம் அவர்களின் பொழிப்புரையுடனும் பண்டிதர் இ. வடிவேலு அவர்களது திருக்கோணாசல நாகதம்பிரான் பற்றிய கட்டுரையுடனும் சேர்த்து மீண்டும் பிரசுரிக்கிறோம். தமிழ் உலகு எமது பணிக்கு ஆதரவு நல்கும் என்பது நம்பிக்கை.

Previous
Next
/