மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற கிழக்கு மாகாண கயிறிழுத்தல் போட்டியில் திருகோணமலை மாவட்ட அணி அபார வெற்றியைப் பதிவு செய்து மாகாண சம்பியனாக வெற்றி வாகை சூடியுள்ளது. 
பயிற்சியாளர் திரு. உமாசுதன் (TRINCO LIFTERS CLUB) அவர்களின் அர்ப்பணிப்புமிக்க பயிற்சி மற்றும் நெறிப்படுத்தலின் கீழ், அணியின் விடாமுயற்சி, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக இவ்வெற்றி அமைந்துள்ளது.
தொடர்ச்சியாகப் பல வெற்றிகளைப் பதிவு செய்து வரும் அணியின் வெற்றிப் பயணத்தில், இவ்வெற்றியும் மற்றுமொரு பெருமைக்குரிய அத்தியாயமாகப் பதிவாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் அணியினருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்! 

