தமிழர் அரசியல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, “வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு” எதிர்வரும் ஜூன் 20, 2026 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா அரங்கில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைகள், வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் எதிர்கால அரசியல் பயணத்தை மையப்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
இம்மாநாட்டை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பாடலின் பாடல் வெளியீட்டு விழா, ஜூன் 7, 2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுகளில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
“வரலாற்றை நினைவுகூர்ந்து, எதிர்காலத்தை உருவாக்குவோம்” என்ற செய்தியை முன்னிறுத்தி, வட்டுக்கோட்டை பிரகடனத்தின் அரை நூற்றாண்டு நினைவைப் பதிவு செய்யும் முக்கிய நிகழ்வாக இது அமையவுள்ளது.

