திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருக்கும் ஜெர்மனி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Dr. Felix Neumann அவர்கள் இன்றைய தினம் (02.06.2026) திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து எமது அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் பணிப்பாளர்களை சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணி தொடர்பான பிரச்சினைகள், மனித உரிமை விடயங்கள் மற்றும் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
இறுதியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிபார்க்கும் அரசியல் தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப் பட்டதுடன்,
குறிப்பாக
1. பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கான நீதிக்காக சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை வேண்டும்,
2. வடக்கு கிழக்குப் பிறதேசங்களில் அரச கட்டமைப்புப் பொறி முறைகளால் அபகரிக்கப்பட்ட காணிகள் உடன் விடுவிக்கப்படல் வேண்டும்.
3. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்,
4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு மேற்படி சர்வதேச நீதிப்பொறி முறை ஊடான நீதி வழங்கப்பட வேண்டும்,
5. செம்மணி போன்ற கூட்டுப் புதை குழிகள் சர்வதேச வல்லுநர்களின் தொழில்நுட்ப மேற்பார்வையின் கீழ் விசாரிக்கப் பட வேண்டும்.
6. சிங்கள காலனித்துவம், இராணுவமயமாக்கல் மற்றும் தமிழர்களின் கலாச்சாரத்தினை அழிக்கும் வேறு எந்த வடிவங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய வேண்டுகோள்களை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. கண்டுமணி லவகுசராசா அவர்களினால் தூதுவரிடம் வழங்கியும் வைக்கப்பட்டது

