Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி 3 பிரிவுகளில் மாவட்டத்தில் முதல் நிலை

சித்திரை 2, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி உயிரியல், பொறியியல், வர்த்தகம் ஆகிய பிரிவுகளில் மாவட்டத்தின் முதல் நிலையை கைப்பற்றியுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியானது உயிரியல், பொறியியல் பிரிவுகளில் மாவட்டத்தின் முதல் நிலையை பெற்றுக் கொண்டுள்ளதோடு வர்த்தகப் பிரிவில் முதல் மூன்று நிலைகளையும் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளது.
அந்த வகையில் உயிரியல் துறையில் செல்வி. தர்ஷனா கோணேஸ் “3ஏ” பெறுபேற்றைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதல் இடத்தையும், அகில இலங்கை ரீதியாக மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார். இவர் 2023 க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9A பெறுபேற்றைப் பெற்று அகில இலங்கை ரீதியில் 6ஆவது இடத்தைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று பொறியியல் துறையில் செல்வி. ஜஷிகா ராஜூ “3ஏ” பெறுபேற்றைப் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதல் இடத்தையும், வர்த்தக பிரிவில் எம்.கீர்த்தனா, பரணிதஸ்ரீ, தவிஷனா ஆகியோர் முறையே மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் இம்முறை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் இருந்து மருத்துவத்துறைக்கு 6 மாணவர்களும், பொறியியல் துறைக்கு 7 மாணவர்களும் தெரிவாகவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட அல்ஹிதாயா மகாவித்தியாலய மாணவி கே.எல்.ஐூனைட் பர்ஹத் ஹயா கலைப்பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீதி விபத்தில் பலி

புரட்டாதி 14, 2025
இலங்கை

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடனான தடய பொருட்களை அடையாளம் காண பொதுமக்களை அழைக்கிறது யாழ்.நீதிமன்றம்

ஆவணி 2, 2025
இலங்கைதிருக்கோணமலை

மூதூர் பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு

ஆவணி 3, 2025
இலங்கைதிருக்கோணமலை

பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த பெண்மணி நியமனம்.

ஆவணி 26, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?