Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

தொடரும் இனவழிப்பு ! முல்லைத்தீவில் இராணுவத்தினரால் துரத்தி துரத்தி தாக்குதல்

முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இராணுவத்தால் அழைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குப் பிறகு காணாமல் போய், இன்று குளத்தில் சடலமாக மீட்பு.

ஆவணி 9, 2025
இலங்கை
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு (Mullaitivu) முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் காணாமல் போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடரும் இனவழிப்பு !

நேற்றுமுன்தினம் காணாமல் போன குறித்த நபர் இன்றையதினம் (09.08.2025) காலை முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து நேற்று முன்தினம் (07.08.2025) இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுவத்தினரால் தாெலைபேசியில் கூறப்பட்டுள்ள நிலையில் அதனையடுத்து நேற்றுமுன்தினம் இரவு ஐந்து பேர் இராணுவ முகாமிற்கு சென்றுள்ளனர்.

இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களை தடிகள், கம்பிகளால் குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை இராணுவத்தினர் துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர்.

அதனால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளார்.

இதனையடுத்து நேற்றையதினம் இராணுவ முகாமிற்கு வந்த இராணுவ வாகனம் வீதியில் வைத்து பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்கப்பட்டது.

அத்துடன் மாயமாகிய குறித்த இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி வலை விட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டும் நேற்று இரவுவரை குறித்த நபர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் காணாமல் போன குறித்த இளைஞனின் சகோதரரால் இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சகோதரர் தெரிவித்திருந்தார்.

காணாமல் போன குறித்த நபர் இன்று சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் தனது தம்பியை அடித்து கொலை செய்து விட்டு இன்றையதினம் அதிகாலை குளத்தில் போட்டுள்ளதாக இறந்தவரின் அண்ணா மற்றும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

மொழிமுனை விவாதப்போட்டியில் தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

ஆவணி 18, 2025
இலங்கை

GovPay பயன்படுத்தும் முறை

சித்திரை 12, 2025
ஆய்வுக் கட்டுரைஇலங்கை

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?

ஆவணி 13, 2025
இலங்கை

கனடாவில் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டத்தை நிறுத்தக் கோரிக்கை

புரட்டாதி 7, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?