வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவா, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைவிடா மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, மத்திய மாகாணங்கள், புத்தளம், திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்துக்கு 55-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் திடீர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.