Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

கிழக்கின் முதுநிலை வீரர்களின் சமர் 2026 சமநிலையில் நிறைவு – இரு அணிகளும் கூட்டுச் சம்பியன்கள்

ஆனி 24, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை மக்கேசர் (MC Hazer) மைதானத்தில் நடைபெற்ற கிழக்கின் முதுநிலை வீரர்களின் சமர் 2026 (Battle of East Masters 2026) கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்ததையடுத்து, திருகோணமலை சுப்பர் 40 (TS40) மற்றும் மட்டக்களப்பு மாஸ்டர்ஸ் அணிகள் கூட்டுச் சம்பியன்களாக அறிவிக்கப்பட்டன.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்றதுடன், விளையாட்டுணர்வு, நட்புறவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாநகர சபை உறுப்பினர் மேஜர் எஸ். செல்வராஜா கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதியாக தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு. குமார் ஜெயக்குமார் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

நான்காவது ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து வீரர்கள், நடுவர்கள், அனுசரணையாளர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

“கிரிக்கெட்டின் உண்மையான நட்பே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கூட்டுச் சம்பியன்களாக கௌரவிக்கப்பட்டுள்ளதன் மூலம், இறுதியில் வெற்றி பெற்றது கிரிக்கெட் விளையாட்டே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது” என திருகோணமலை சுப்பர் 40 கிரிக்கெட் கழகம் தெரிவித்துள்ளது.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வடமாகாணத்தில் கல்வி நிலைமைக்கு நிர்வாக பிரச்சினையே காரணம் – பிரதமர்

ஆவணி 4, 2025
இலங்கை

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின் நுட்ப அரசியல்

புரட்டாதி 18, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிக்கு உத்தரவு

ஆவணி 7, 2025
இலங்கைதிருக்கோணமலை

சம்பூர் பகுதிக்கு சட்டத்தரணிகள் குழாம் நேரில் சென்று ஆய்வு

ஆடி 31, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?