திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம் (TDBC) ஜெர்மனி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் டாக்டர் பெலிக்ஸ் நியூமன் (Dr. Felix Neumann) அவர்களை, சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் இணைந்து அண்மையில் திருகோணமலையிலுள்ள J7 விராஜ் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடியது.
இச்சந்திப்பின் போது திருகோணமலை மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி வாய்ப்புகள் மற்றும் ஜெர்மன் முதலீட்டாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தல் மற்றும் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
மேலும், ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதுடன், திருகோணமலையின் நிலையான அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட கூட்டு முயற்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனம், சர்வதேச ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் மாவட்டத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்தும் பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

