Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

திருகோணமலையில் ‘INS தரங்கிணி’ கப்பலில் இலங்கை கடற்படையினருக்கான விசேட பயிற்சி

பங்குனி 1, 2026
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியக் கடற்படையின் புகழ்பெற்ற பாய்மரப் பயிற்சி கப்பலான ‘ஐஎன்எஸ் தரங்கிணி’ (INS Tarangini), திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினருக்கான விசேட பயிற்சிகளை கடந்த 27ம் திகதி மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.

​இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நீண்டகால ‘நட்புறவுப் பாலங்களை’ (Bridges of Friendship) வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இப்பயிற்சி நெறியில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 25 பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இன்றைய ஆரம்ப நிகழ்வின் போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (Defence Adviser) கொமடோர் ஆனந்த் முகுந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
​இப்பயிற்சியின் ஒரு சிறப்பம்சமாக, பயிற்சியில் ஈடுபடும் இலங்கை கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் இன்று கப்பலுக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் கப்பலின் உட்பகுதிகளைப் பார்வையிட்டதுடன், வீரர்களின் பயிற்சிச் சூழலையும் நேரில் கண்டு களித்தனர்.

​நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கப்பலின் கட்டளை அதிகாரி (Captain) கமாண்டர் நிதின் கஜ்ஜார், பின்வருமாறு குறிப்பிட்டார்,
​”இந்திய – இலங்கை இடையிலான ஆழமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவின் அடிப்படையிலேயே இந்தப் பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய கடற்படைச் சூழலிலும், பாய்மரக் கப்பல் மூலம் வழங்கப்படும் அடிப்படைச் சீர்மியப் பயிற்சிகள் (Seamanship) ஒரு கடற்படை வீரரின் ஆளுமைக்கும், மன உறுதிக்கும் மிக அவசியமானவை. இவ்வாறான பயிற்சிகளை இலங்கை கடற்படைக்கு இந்தியக் கடற்படை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இது இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.”

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

சம்பூர் படுகொலையின் ரணங்களை மீள நினைவூட்டும் 2025 ஜூலை

ஆடி 29, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை கடற்கரை பகுதியில் சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம்

மாசி 24, 2026
இலங்கைஉலகம்

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைக்கு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள்

ஆவணி 9, 2025
இலங்கை

கனிய மண் அகழ்வுக்கு எதிராக வெடிக்கும் மாபெரும் போராட்டம் – கருநிலம்

ஆவணி 4, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?