திருகோணமலை உட்துறைமுக வீதி பகுதியில், ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள உவர்மலை விளையாட்டு மைதானத்தில், நேற்று (28) காலை சில பௌத்த மதகுருமார்கள் அளவீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அப்பகுதி மக்களிடையே சிறிது குழப்பம் ஏற்பட்டது.
இதுகுறித்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த அளவீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தர்மபோதனை நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான முன்னேற்பாடுகளாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எதிர்வரும் 4ஆம் திகதி கண்டியிலிருந்து வருகை தரும் ஒரு பௌத்த மதகுருவினால் இந்த தர்மபோதனை நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் இலங்கையில் வாழும் அனைத்து இன, மத மற்றும் மொழி சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படும் ஒரு மதத் தலைவராக விளங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், குறித்த தர்மபோதனை நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தில் வாழும் அனைத்து இன, மத மற்றும் மொழி பேசும் மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.

