Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

மலேசிய மண்ணில் சாதனை படைத்த திருகோணமலை மாணவி

மார்கழி 23, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
சர்வதேச ரீதியில் ஐந்தாவது வருடமாக நடைபெற்ற “சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0 சொற்போர்” திறந்த விவாதச் சமரானது நேற்றும் இன்றும் (19,20/12/2025) மலேசியாவின் உத்தரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய விவாத அணிகள் போட்டியிட்டிருந்தன.
இதில் இலங்கையின் தேசிய அணியில்
* செல்வன் ஜெயரூபன் ஹரிஸ் – ரோயல் கல்லூரி, கொழும்பு
* செல்வி லக்ஷ்மிதா சிவசங்கரன் – ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி திருகோணமலை
* செல்வன் மைக்கல் ஜெனுசன் – புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்
* செல்வி பிரதீபன் சிவாஜினி – மெதடித்த பெண்கள் கல்லூரி, பருத்தித்துறை ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.
இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் தேசிய அணியை தோற்கடித்து இலங்கையின் தேசிய விவாத அணியினர் 2025ம் ஆண்டிற்கான “சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0 சொற்போர்” வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து வாகை சூடிக்கொண்டனர். வெற்றியாளர்கள் பணப்பரிசிலும் தங்கப்பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இன்று திருகோணமலை மண் பேருவகையும் பெருமையும் அடையும் வண்ணம், உலகின் தலைசிறந்த இளந்தமிழ் விவாதிகளில் ஒருவராக தி/ஸ்ரீ சண்முகாவின் செல்வி லக்ஷ்மிதா சிவசங்கரன் பாராட்டி கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அகில இலங்கை தமிழ் விவாதிகள் மன்றத்தினால் இலங்கை முழுவதிலுமிருந்து பாடசாலைகளிடையே நடாத்தப்பட்ட “மொழிமுனை – 2025” விவாதச் சுற்றுப்போட்டியின் அடிப்படையில் சிறந்த விவாதிகள் தெரிவுசெய்யப்பட்டு இப்போட்டிக்கான இலங்கையின் தேசிய விவாத அணி தயார் படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
“மொழிமுனை -2025” போட்டியில் எமது தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி நான்காம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் அகில இலங்கை ரீதியிலான சிறந்த விவாதிகளாக எமது கல்லூரியின் சி.லக்ஷ்மிதா – 4ம், ரெ. ஸ்ரீஅக்ஷயா – 7ம் இடங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

செம்மணியில் மேலதிக புதைகுழிகள் கண்காணிப்பு – தரைகீழ் ஸ்கேனிங் (GPR) பணிகள் ஆரம்பம்

ஆவணி 4, 2025
இலங்கைதிருக்கோணமலை

மாகாண மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மூதூர் கலைமகள் இந்துக் கல்லூரி மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சாதனை

ஆவணி 13, 2025
இலங்கை

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிப்பு

ஆடி 28, 2025
இலங்கை

இராணுவ தாக்குதலில் உயிரிழந்த இளைஞனுக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் பலரும் இறுதி அஞ்சலி

ஆவணி 12, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?