Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

எதிர்வரும் 30 ஆம் திகதி சுயாதீன விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் மாபெரும் போராட்டம்

ஆவணி 26, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிப்பதுடன், சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தி எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழின அழிப்புக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கங்களின் தலைவிகள், உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு நீதிபொறிமுறையில் 17வருடமாக நம்பிக்கையிழந்த நிலையில் தொடர்ச்சியாக சர்வதேச நீதிப்பொறிமுறையினை கோரிவரும் நிலையில் எதிர்வரும் ஐநா மனித உரிமைகள் அமர்வின் போது தமது கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையிலான தீர்மானத்தினைக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

https://trincomirror.com/wp-content/uploads/2025/08/சர்வதேச-வலிந்து-காணாமல்-ஆக்கப்பட்டவர்களுக்கான-தினம்-ஆகஸ்ட்-30.mp4

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்திலிருந்து சர்வதேச நீதிகோரிய பேரணி ஆரம்பமாகி புதிய கல்லடி பாலத்தின் ஊடாக காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி வரையில் பேரணி நடைபெறவுள்ளது.

அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றும் நடாத்தப்படவுள்ளதுடன் சர்வதேச நீதிகோரி ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை வாசிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த போராட்டம் வெறுமனே வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டமாக கருதாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டமாக நடாத்துவதற்கு அனைவரையும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்குமாறு இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவு

ஆவணி 18, 2025
இலங்கைதிருக்கோணமலை

இலங்கை உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த தி/புனித சூசையப்பர் கல்லூரி மாணவன்

ஆவணி 13, 2025
இலங்கைதிருக்கோணமலை

மன்னார் “கருநிலம்” போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் கவனயீர்ப்பு

ஆவணி 6, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருக்கோணமலை உப்புவெளி கடற்கரை பொழுதுபோக்கு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று

ஆவணி 19, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?