பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் குறித்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 071859 8888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று முதல் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், வீடியோக்கள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, காவல்துறை அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.