திருகோணமலை திரியாய் 05ம் வட்டாரத்தில் ஆணொருவனின் சடலமொன்று நேற்று (08) மீட்கப்பட்டுள்ளது.
சடலம் யாருடையது என்பது பற்றி இன்னும் இனம் காணப்படவில்லை எனவும் 40 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர் எனவும் சடலத்தை இனம் காண முடியாத நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் நாளைய தினம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.