மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைச்சேனை களப்புப் பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் மீனவரொருவரின் ஜனாஸா இன்று புதன்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சேகு முகம்மது றம்சூன் (வயது 45) என தெரியவருகிறது.
குறித்த நபர் இன்று அதிகாலை களப்புக் கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் சென்றுள்ள நிலையில் களப்புப் பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.மீன்பிடிப்பதற்காகச் சென்ற மற்றுமொரு மீனவரொருவர் நீரில் மிதந்த நிலையில் சடலமொன்று கிடப்பதைக் கண்டு மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இதன் பின்னர் மூதூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகை தந்து ஜனாஸாவை பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்ட பின்னர், ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.