Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

கந்தளாய் காட்டில் 4 ஏக்கர் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு – சிறப்பு அதிரடிப்படையினரால் சுற்றி வளைப்பு

ஆடி 30, 2025
இலங்கை திருக்கோணமலை
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

திருகோணமலை – மொரவெவ பகுதியில் அமைந்துள்ள கந்தளாய் வனப்பகுதியில் நான்கு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்று சிறப்பு அதிரடிப்படையினரால் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்த  நடவடிக்கை, சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வாவின் வழிகாட்டலின் பேரில், திருகோணமலை சிறப்பு அதிரடிப்படை முகாமும் புல்முடா முகாமும் பெற்ற தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.

செயல்பாட்டின் போது, மொரவெவ சிறப்பு அதிரடிப்படையின் பொறுப்பதிகாரியான தலைமை பொலிஸ் பரிசோதகர் கீர்த்தி சின்ஹா, ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு பணியக அதிகாரிகள் இணைந்து பன்குளம் பகுதியிலுள்ள வனப்பகுதியை முற்றுகையிட்டனர்.

மொரவெவ பொலிஸாரின் தகவலின்படி, இந்த கஞ்சா சாகுபடி மிக நுணுக்கமாகவும் திட்டமிட்டு காட்டின் ஆழ பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கமைவாக, சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சா செடிகளை அழிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

கலங்க வைக்கும் செம்மணி : குழந்தையின் என்பு அருகே பால் போத்தல்

ஆடி 26, 2025
இலங்கைதிருக்கோணமலை

தி/இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வர இந்துக்கல்லூரி பழைய மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஆவணி 20, 2025
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் உறுப்புரிமை குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு

ஆவணி 2, 2025
இலங்கைதிருக்கோணமலை

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் 100 நாள் செயல்முனைவின் 10 ஆவது நாள் நிகழ்வு

ஆவணி 11, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?