தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான நூதன போராட்டம் கடந்த 24, 25 திகதிகளில் நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சிறைவாழ்க்கை உணர்க் கண்காட்சி, அரங்க நிகழ்வுகள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடத்தப்பட்ட “விடுதலை மரத்துக்கான” விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றது.
அத்துடன் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர் சதீஸ் எழுதிய “துருவேறும் கைவிலங்கு” நூல் அறிமுகமும் நிகழ்த்தப்பட்டது.